கார்த்திக் தன் கல்லூரி கால நெருங்கிய நண்பனின் திருமணத்திற்காக அந்த கிராமத்துத் திருமண மண்டபத்திற்கு வந்து இறங்கியபோது, மாலை நேரம் மெல்ல மறைந்து இரவின் நிழல் படரத் தொடங்கியிருந்தது. மண்டபம் முழுவதும் விளக்கொளியிலும், நாதஸ்வர இசையிலும் பிஸியாக இருந்தது. கார்த்திக் நண்பர்களைச் சந்தித்துவிட்டு ஹாலில் அமர்ந்திருந்தபோது, அவனது கண்கள் கூட்டத்தில் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி நிலைத்து நின்றன.
அங்கே, அடர் நீல நிறப் பட்டுப்புடவையில், மல்லிகைப் பூச்சூடி, கைகளில் வளையல்கள் குலுங்க தேவதையாய் நின்றிருந்தாள் ரம்யா. கார்த்திக்கின் கல்லூரி காலக் காதலி. சூழ்நிலை காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவளுக்குப் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையுடன் திருமணமாகிவிட்டது. அவளது அந்தச் சிகப்பான நிறமும், எடுப்பான தேகமும், பட்டுப்புடவையின் இறுக்கத்தில் இன்னும் கூடுதலாகத் தகிப்பைக் கூட்டியிருந்தது. அவளைப் பார்த்த கணமே கார்த்திக்கின் நெஞ்சுக்குள் அடக்கி வைத்திருந்த பழைய நினைவுகளின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது.




















Write a comment ...